Saturday, June 01, 2013

பதிவுகள்

நிகழ்காலத்தில் 
நித்தமும் இறக்கும் மனிதருக்கு 
இறந்தகாலம்தான் வசந்தகாலம் !

வெக்கையைத் தூறிச்சென்ற மழைகூட 
திரும்பிப்பார்க்கவில்லை 
வெகுநாட்களாய் !
தண்ணீருக்காகத்தான் அடுத்த யுத்தமென்பது 
பலித்துவிடுமோ ?!?

வெயில்படர்ந்த 
சாலைப்பயணத்தின் ஊடே 
நனைத்துச்செல்லும் 
மழையின் பதிவுகள் 
கிளர்த்திவிடுகின்றன ...
பால்யத்தின் வாசனைகளை !

Saturday, February 13, 2010

நினைவில் நிழலாய்...

காதலிப்பவர்கள் பாக்யவான்கள்!
அல்லாதவர்கள் புண்ணியவான்கள்!

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு.
உன்மத்தம் தரும்
உன் முத்தத்திற்கு என்ன பொருள்?

நினைவில் நிழலாய்...

காதலிப்பவர்கள் பாக்யவான்கள்!
அல்லாதவர்கள் புண்ணியவான்கள்!

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு.
உன்மத்தம் தரும்
உன் முத்தத்திற்கு என்ன பொருள்?

Thursday, October 02, 2008

சில நினைவுகள்..

என்
இதய நதிக்கரையெங்கும்
நீ
நடந்து சென்ற கால்தடங்கள்!
நான் உன்னைக் காதலிக்கிறேன்!!



உன் கண்ணின் மைகளுக்குள்ளே...
எனக்கு நடந்து வர ஆசை!
உன் கண்ணின் இமைகளுக்குள்ளே...
உயிர் கடந்து வர ஆசை!!



உன் கால்கள்
நடக்கும் திசையெங்கும் - என்
பிருந்தாவனம்!
உன் கண்கள்
தீண்டும் முதல் பார்வை - என்
நந்தவனம்!



ஒரு மின்னல் போல வந்து..
மின்னல் போல வந்து...
உன்னைப் பார்த்து விட்டு
போகின்றேன்!
ஒரு தென்றல் போல வந்து..
தென்றல் போல வந்து...
உன் கன்னம் தீண்டி விட்டு
செல்கின்றேன்!

Friday, June 20, 2008

உன் நினைவுகள்!

காலைப் பொழுதில்
கண் விழிக்கும் முன்பே..
விடியலாய் என்னுள்
விரவிக் கிடக்கிறாய் நீ..

என் காதலை
எழுதிச் சொல்ல
எதுவும் இல்லை என்று..
இதயத்தைத் தருகிறேன்..
எடுத்துக் கொள்!

மின்னல் வீசும் உன்
கண்களின் ஓரம் சிறு துளி...
என் இதயத்தில் இடி!!

என் நினைவை இனிப்பாக்கி
நெஞ்சை தவிப்பாக்கினாய்!

துணியில் பட்ட எண்ணைத் துளியாய்
என் மனதை மெல்ல ஆக்கிரமிக்கிறது...
உன் நினைவுகள்!!

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பில்
உணர்ந்தேன் உன் அருகாமையை...
எத்தனை மென்மையானவள் நீ!!

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்கள்
எப்பொதுமே தொடர்போடு இருக்கும்...
இது chaos theory!
காதலும் நாமும் போல!!

யாருக்கும் தெரியாது...
எந்த தென்றலின் தொடலில்
மூங்கில் புல்லாங்குழல் ஆகுமென்று!
நான் ஒவ்வொரு முறையும் ஆகிறேன்..
நீ தொடும் பொழுது!

என் நிழலும் நீயானாய்!
என் வனத்தில் பூவானாய்!!
என் உயிரில் மெய்யானாய்!!!
நான் உயிர்மெய்யானேன்!

என் நிழலாய் நீ வருவாயென்றால்...
வெய்யிலில் நடக்கவும் சம்மதமே!

காற்று வீசும் திசையெங்கும்
paper பறப்பது போல்..
உன் கண்கள் பார்க்கும் தொலைவெங்கும்
என் மனது பறக்கிறது!

பார்வதிக்குக்கூட
பாதி உடல் தான் கொடுத்தான் சிவன்..
நானோ உன்னிடம்
முழுவதும் தருகிறேன் என்னை!

Saturday, December 22, 2007

நீ வரமா! சாபமா??

மழை பொழிந்து வாசல் தெளித்தது மேகம்
மென்சோகக் கவிதையாய்...
நீ
வாசல் தெளிக்கும் வாய்ப்பை - இன்று
தவறவிட்டது உன் தெரு!

அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டாய்
சரிந்து வீழ்கிறேன்...
உன் சிரிப்பினில்!

நாத்து நடும் வேளையிலே
காத்திருந்து சிரிச்சவளே...
நாத்து முத்தி நின்னாச்சு
அறுவடைக்குத் தேதி சொல்லு!

சடசடவென
சோம்பல் முறிக்கும் தூரல்...
நினைவுபடுத்திச் சென்றது உன்னை!

அனுதினமும் என்னை உறங்க வைப்பது...
உன் குரலா??
இல்லை..
உன் குரல் கேட்ட நிறைவா???

முன்னிரவுப் பொழுதில் பெய்த மழையில்
நனைந்தது நான் மட்டுமில்லை...
என் மனதும்தான்!

நீண்டநெடு நாட்களுக்குப்பின்
கவிதைகள் புனைந்தேன்...
காரணம் நீ!

என்னில் விழுந்ததும் நீதான்..
என்னுள் இருந்ததும் நீதான்..
இரவு நேரக்கனவின் வழியே..
இதயம் திருடிச்சென்றவள் நீதான்!
பகல்பொழுதில் - பாதத்தில்...
பக்கவாத்தியக் குறுகுறுப்பு நீதான்!
தொலைபேசா நாட்களிலே..
தொல்லையாக இருப்பவள் நீதான்!
கண்ணீர் சிந்தும் பொழுதுகளில்..
கைகள் மீது பற்றுதல் நீதான்!
என்னை உருக்கும் இயல்பினிலே..
எப்பொழுதும் எனக்குள் நீதான்!
கவிதையே சொல் - நீ
வரமா? சாபமா??
இல்லை...
வரம்வாங்கச் செய்யும் தவமா???

Tuesday, December 18, 2007

அழகான ராட்சசிக்கு...

நீ இல்லாத நிலமும் வானும்
வான் இல்லாத இரவும் நிலவும்
நீ பேசாத இரவும் பகலும்
நான் வாழாத தருணங்களாகும்
புயல் காற்று வீசுகின்ற போதும்
என் சுவாசம் உன்னைத்தான் தேடும்
மழை தூறும் பகல்நேர வானம்
உன் பார்வை நினைவூட்டிச் செல்லும்
சிறு குழந்தை பார்க்கின்ற போதும்
உன் குறும்பு நெஞ்சுக்குள் மலரும்
பனிக்காற்று பறைசாற்றி செல்லும் - ஒரு
பறவை போல் மனம் துள்ளும்
நான் இயல்பாக இருக்க நினைத்தால்
உன் இயல்பு எனை மாற்றிச் செல்லும்
ஏன் தோழி??

தென்றல் என்னைத்
தொட்டுச் செல்கையில்
தேடிப் பார்க்கிறேன்
ஒவ்வொரு முறையும்...
நீ
என்ன சொல்லியனுப்பினாய் என்று!!!

நீயும் மழையும்
தூண்டிவிடுகிறீர்கள் என்னை...
கவிதை எழுத!!!

மழைக்கால மரக்கிளையில்
பறவைகளின் கீச் கீச்...
உணவு தேட இயலாததாலா...
சிறகுகளே சுமையானதாலா...

ஒரு வாரப் பிரிவு
உணர்த்தியது எனக்கு...
எனக்குள் நீ
எத்தனை ஆழமாய்
வேரூன்றி இருக்கிறாய் என்று!!

அனிச்சை செயலாய்
ஆகிப் போனது...
உனக்குத் தொலைபேசுவதும்
குறுஞ்செய்தி அனுப்புவதும்!!!

பிரிவின் வலியை விட
வலித்தது அதிகமாய்...
தெரிந்தே பிரிந்திருக்கிறோம் என்பதால்!!!

காற்றின் திசையில்
திரும்பும் மலர்கள்...
நீ வந்தவுடன்
சூரியகாந்தியானது ஏன்??

வெறுமையை சுமந்து திரிகிறேன்...
பொறுமையை சோதிக்காதே பெண்ணே..

ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போல்
இருப்பதாக சொன்னார்கள்..
அது
நான் தான் என்பது தெரியாமல்!!

கடந்து போன மேகம்
எனக்கு மட்டும்
மழை தூறிச் சென்றது...
என்ன சொல்லியனுப்பினாய்?!?

ஒரு வாரத்தின் முடிவில்
நீ
என்ன பெறப்போகிறாயோ
நானறியேன்...
ஆனால்
நான் இழப்பது அதிகம்!!!

என் வாழ்வில் நீ
வார்த்தையல்ல... வாக்கியம்!!!
முற்றுப்புள்ளி இல்லாது
முற்றுப் பெற்றவள் நீமட்டும்தான்!!!

உன்னுடன் பேசாதிருந்த நாட்களில்
நான் உயிர்வாழ்ந்ததாய்
நினைவிலில்லை...

உன் மடிமீது தலைவைத்து
நட்சத்திரங்கள் எண்ணத்
தேவையில்லை எனக்கு...
உன் தோளில் முகம் புதைக்கும்
தோழமை போதும் எனக்கு!!!