நீ இல்லாத நிலமும் வானும்
வான் இல்லாத இரவும் நிலவும்
நீ பேசாத இரவும் பகலும்
நான் வாழாத தருணங்களாகும்
புயல் காற்று வீசுகின்ற போதும்
என் சுவாசம் உன்னைத்தான் தேடும்
மழை தூறும் பகல்நேர வானம்
உன் பார்வை நினைவூட்டிச் செல்லும்
சிறு குழந்தை பார்க்கின்ற போதும்
உன் குறும்பு நெஞ்சுக்குள் மலரும்
பனிக்காற்று பறைசாற்றி செல்லும் - ஒரு
பறவை போல் மனம் துள்ளும்
நான் இயல்பாக இருக்க நினைத்தால்
உன் இயல்பு எனை மாற்றிச் செல்லும்
ஏன் தோழி??
தென்றல் என்னைத்
தொட்டுச் செல்கையில்
தேடிப் பார்க்கிறேன்
ஒவ்வொரு முறையும்...
நீ
என்ன சொல்லியனுப்பினாய் என்று!!!
நீயும் மழையும்
தூண்டிவிடுகிறீர்கள் என்னை...
கவிதை எழுத!!!
மழைக்கால மரக்கிளையில்
பறவைகளின் கீச் கீச்...
உணவு தேட இயலாததாலா...
சிறகுகளே சுமையானதாலா...
ஒரு வாரப் பிரிவு
உணர்த்தியது எனக்கு...
எனக்குள் நீ
எத்தனை ஆழமாய்
வேரூன்றி இருக்கிறாய் என்று!!
அனிச்சை செயலாய்
ஆகிப் போனது...
உனக்குத் தொலைபேசுவதும்
குறுஞ்செய்தி அனுப்புவதும்!!!
பிரிவின் வலியை விட
வலித்தது அதிகமாய்...
தெரிந்தே பிரிந்திருக்கிறோம் என்பதால்!!!
காற்றின் திசையில்
திரும்பும் மலர்கள்...
நீ வந்தவுடன்
சூரியகாந்தியானது ஏன்??
வெறுமையை சுமந்து திரிகிறேன்...
பொறுமையை சோதிக்காதே பெண்ணே..
ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போல்
இருப்பதாக சொன்னார்கள்..
அது
நான் தான் என்பது தெரியாமல்!!
கடந்து போன மேகம்
எனக்கு மட்டும்
மழை தூறிச் சென்றது...
என்ன சொல்லியனுப்பினாய்?!?
ஒரு வாரத்தின் முடிவில்
நீ
என்ன பெறப்போகிறாயோ
நானறியேன்...
ஆனால்
நான் இழப்பது அதிகம்!!!
என் வாழ்வில் நீ
வார்த்தையல்ல... வாக்கியம்!!!
முற்றுப்புள்ளி இல்லாது
முற்றுப் பெற்றவள் நீமட்டும்தான்!!!
உன்னுடன் பேசாதிருந்த நாட்களில்
நான் உயிர்வாழ்ந்ததாய்
நினைவிலில்லை...
உன் மடிமீது தலைவைத்து
நட்சத்திரங்கள் எண்ணத்
தேவையில்லை எனக்கு...
உன் தோளில் முகம் புதைக்கும்
தோழமை போதும் எனக்கு!!!