Thursday, December 07, 2006

நதியாய் வந்தேன்...
கடலாய் இருந்தாய்!
பனியாய் வந்தேன்...
துளியாய் இருந்தாய்!
இதழாய் வந்தேன்...
மலராய் இருந்தாய்!
அன்பாய் வந்தேன்...
யோசித்தாய்....
அள்ளிக்கொண்டாய் - என்னை உன்
அன்பில் கொன்றாய்!

என்னைப் பிரிந்துசென்று
தனிமைப்பட வைத்தாய்.. - என்
தனிமையை!

அதிகாலை நேர
வெந்நீர் குளியல் போல
இருக்கிறது...
உன் அருகாமை!

நீ இமைக்கும்
ஒவ்வொரு முறையும்...
இரவு பகல் எனக்கு!

இரவு நேர வானவில் போலத்தான்...
நீ
உறங்கும் போது புன்னகைப்பதும்!

ஒவ்வொரு முறை நீ
இயற்கையை ரசிக்கையில் - நான்
உன்னை ரசிக்கிறேன்!

முன்பெல்லாம் கவிதை சொல்ல
ஏதேதோ காரணங்கள் தேவை எனக்கு...
இன்றோ...
நீ மட்டும்!

Monday, December 04, 2006

Gai special.. for her one week vacation to her village

என் எல்லா நாட்களிலும்
நிறைந்திருக்கிறாய் நீ...
sms ஆகவும் Received callகளாகவும்!

காத்திருப்போர் பட்டியலில் அனுப்பப்பட்ட
அதிகாரியின் மனநிலையில் இருக்கிறேன் நான்!
உன் வருகையைஎதிர்நோக்கி!

இனிஒரு வாரத்திற்கு
என் செல்பேசி ஊமையாகிறது...
தொந்தரவுகளில்லாததால்.. தொந்தரவு!

நட்சத்திரங்களில்லாத வானமாக
நகரப்போகின்றன... எனது நாட்கள்!
அமாவாசை கூட ஒரு நாள்தானடி..
எனக்கு மட்டும் ஏன் ஒரு வாரம்?!