Wednesday, April 25, 2007

காதல் தேசம்

காதல்....
உளியா... கோடாலியா!!!

காதல்...
கத்தியா... சுத்தியலா!!!

காதல்...
தாயா... நீயா?!?

*** ***

காத்திருக்கும் பொழுதெல்லாம் எப்படி
காதல் மட்டும் தவமாகிறது!?!

*** ***

இந்தக் காதல் மட்டும்
ஏன் அழகானவைகளை
உன்னுடன் மட்டும்
ஒப்பிட வைக்கிறது?!?

*** ***

எப்போதும்
கேள்விக்குறியான என்னை
ஆச்சர்யக்குறியாக்கி
அதிசயம் செய்ததே...
காதலில் அப்படி
என்னதான் இருக்கிறது!!!
காதலைத்தவிர???

Tuesday, April 17, 2007

என்
நினைவுகள் கொன்றாய்...
பாதகமில்லை!!!
எச்சங்கள் மிச்சமிருக்கின்றனவே...
என்ன செய்யப்போகிறாய்?!?

Monday, April 16, 2007

அம்மா

அப்போது சிறுவயது...

பென்சில் சீவுகையில்
அறுந்துபட்ட காயத்திற்கான
அழுகை அது!!!

அழுகைக் குரல் கேட்டு
அடித்துக்கொண்டே மருந்திட்டாய் அம்மா...
அன்பான வசவுகளுடன்!!!

இன்றும் வெட்டிக்கொண்டேன்...

ஆனால்...
அடித்துக்கொண்டும் திட்டிக்கொண்டும்
மருந்துபோட... நீ
அருகிலில்லாததுதான் வலிக்கிறது அம்மா...!!!

Monday, April 09, 2007

என் செல்ல நிலவைக்
கிள்ளியது யார்?
அழுது அழுது...
தேய்ந்து போகிறதே!!!

முனை மடிக்கப்பட்ட
புத்தகமாய் வாழ்க்கை!!!
நினைவுகளைக்
குறிப்பெடுத்துக் கொண்டு!

காற்று மரித்துப்போன
பகல் வேளைகளில்...
ரசிப்பதற்கு மிச்சமிருக்கிறது...
காற்றலையில் தவழ்ந்து வரும்
பண்பலை!!!