Saturday, December 22, 2007

நீ வரமா! சாபமா??

மழை பொழிந்து வாசல் தெளித்தது மேகம்
மென்சோகக் கவிதையாய்...
நீ
வாசல் தெளிக்கும் வாய்ப்பை - இன்று
தவறவிட்டது உன் தெரு!

அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டாய்
சரிந்து வீழ்கிறேன்...
உன் சிரிப்பினில்!

நாத்து நடும் வேளையிலே
காத்திருந்து சிரிச்சவளே...
நாத்து முத்தி நின்னாச்சு
அறுவடைக்குத் தேதி சொல்லு!

சடசடவென
சோம்பல் முறிக்கும் தூரல்...
நினைவுபடுத்திச் சென்றது உன்னை!

அனுதினமும் என்னை உறங்க வைப்பது...
உன் குரலா??
இல்லை..
உன் குரல் கேட்ட நிறைவா???

முன்னிரவுப் பொழுதில் பெய்த மழையில்
நனைந்தது நான் மட்டுமில்லை...
என் மனதும்தான்!

நீண்டநெடு நாட்களுக்குப்பின்
கவிதைகள் புனைந்தேன்...
காரணம் நீ!

என்னில் விழுந்ததும் நீதான்..
என்னுள் இருந்ததும் நீதான்..
இரவு நேரக்கனவின் வழியே..
இதயம் திருடிச்சென்றவள் நீதான்!
பகல்பொழுதில் - பாதத்தில்...
பக்கவாத்தியக் குறுகுறுப்பு நீதான்!
தொலைபேசா நாட்களிலே..
தொல்லையாக இருப்பவள் நீதான்!
கண்ணீர் சிந்தும் பொழுதுகளில்..
கைகள் மீது பற்றுதல் நீதான்!
என்னை உருக்கும் இயல்பினிலே..
எப்பொழுதும் எனக்குள் நீதான்!
கவிதையே சொல் - நீ
வரமா? சாபமா??
இல்லை...
வரம்வாங்கச் செய்யும் தவமா???

1 comment:

moni said...

Unmayoo!
poyyoo!
Rasippen
Nee paesinaal..

Varamo!
Saabamo!
yaerpen
Nee sonnaal...