மழை பொழிந்து வாசல் தெளித்தது மேகம்
மென்சோகக் கவிதையாய்...
நீ
வாசல் தெளிக்கும் வாய்ப்பை - இன்று
தவறவிட்டது உன் தெரு!
அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டாய்
சரிந்து வீழ்கிறேன்...
உன் சிரிப்பினில்!
நாத்து நடும் வேளையிலே
காத்திருந்து சிரிச்சவளே...
நாத்து முத்தி நின்னாச்சு
அறுவடைக்குத் தேதி சொல்லு!
சடசடவென
சோம்பல் முறிக்கும் தூரல்...
நினைவுபடுத்திச் சென்றது உன்னை!
அனுதினமும் என்னை உறங்க வைப்பது...
உன் குரலா??
இல்லை..
உன் குரல் கேட்ட நிறைவா???
முன்னிரவுப் பொழுதில் பெய்த மழையில்
நனைந்தது நான் மட்டுமில்லை...
என் மனதும்தான்!
நீண்டநெடு நாட்களுக்குப்பின்
கவிதைகள் புனைந்தேன்...
காரணம் நீ!
என்னில் விழுந்ததும் நீதான்..
என்னுள் இருந்ததும் நீதான்..
இரவு நேரக்கனவின் வழியே..
இதயம் திருடிச்சென்றவள் நீதான்!
பகல்பொழுதில் - பாதத்தில்...
பக்கவாத்தியக் குறுகுறுப்பு நீதான்!
தொலைபேசா நாட்களிலே..
தொல்லையாக இருப்பவள் நீதான்!
கண்ணீர் சிந்தும் பொழுதுகளில்..
கைகள் மீது பற்றுதல் நீதான்!
என்னை உருக்கும் இயல்பினிலே..
எப்பொழுதும் எனக்குள் நீதான்!
கவிதையே சொல் - நீ
வரமா? சாபமா??
இல்லை...
வரம்வாங்கச் செய்யும் தவமா???
Saturday, December 22, 2007
Tuesday, December 18, 2007
அழகான ராட்சசிக்கு...
நீ இல்லாத நிலமும் வானும்
வான் இல்லாத இரவும் நிலவும்
நீ பேசாத இரவும் பகலும்
நான் வாழாத தருணங்களாகும்
புயல் காற்று வீசுகின்ற போதும்
என் சுவாசம் உன்னைத்தான் தேடும்
மழை தூறும் பகல்நேர வானம்
உன் பார்வை நினைவூட்டிச் செல்லும்
சிறு குழந்தை பார்க்கின்ற போதும்
உன் குறும்பு நெஞ்சுக்குள் மலரும்
பனிக்காற்று பறைசாற்றி செல்லும் - ஒரு
பறவை போல் மனம் துள்ளும்
நான் இயல்பாக இருக்க நினைத்தால்
உன் இயல்பு எனை மாற்றிச் செல்லும்
ஏன் தோழி??
தென்றல் என்னைத்
தொட்டுச் செல்கையில்
தேடிப் பார்க்கிறேன்
ஒவ்வொரு முறையும்...
நீ
என்ன சொல்லியனுப்பினாய் என்று!!!
நீயும் மழையும்
தூண்டிவிடுகிறீர்கள் என்னை...
கவிதை எழுத!!!
மழைக்கால மரக்கிளையில்
பறவைகளின் கீச் கீச்...
உணவு தேட இயலாததாலா...
சிறகுகளே சுமையானதாலா...
ஒரு வாரப் பிரிவு
உணர்த்தியது எனக்கு...
எனக்குள் நீ
எத்தனை ஆழமாய்
வேரூன்றி இருக்கிறாய் என்று!!
அனிச்சை செயலாய்
ஆகிப் போனது...
உனக்குத் தொலைபேசுவதும்
குறுஞ்செய்தி அனுப்புவதும்!!!
பிரிவின் வலியை விட
வலித்தது அதிகமாய்...
தெரிந்தே பிரிந்திருக்கிறோம் என்பதால்!!!
காற்றின் திசையில்
திரும்பும் மலர்கள்...
நீ வந்தவுடன்
சூரியகாந்தியானது ஏன்??
வெறுமையை சுமந்து திரிகிறேன்...
பொறுமையை சோதிக்காதே பெண்ணே..
ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போல்
இருப்பதாக சொன்னார்கள்..
அது
நான் தான் என்பது தெரியாமல்!!
கடந்து போன மேகம்
எனக்கு மட்டும்
மழை தூறிச் சென்றது...
என்ன சொல்லியனுப்பினாய்?!?
ஒரு வாரத்தின் முடிவில்
நீ
என்ன பெறப்போகிறாயோ
நானறியேன்...
ஆனால்
நான் இழப்பது அதிகம்!!!
என் வாழ்வில் நீ
வார்த்தையல்ல... வாக்கியம்!!!
முற்றுப்புள்ளி இல்லாது
முற்றுப் பெற்றவள் நீமட்டும்தான்!!!
உன்னுடன் பேசாதிருந்த நாட்களில்
நான் உயிர்வாழ்ந்ததாய்
நினைவிலில்லை...
உன் மடிமீது தலைவைத்து
நட்சத்திரங்கள் எண்ணத்
தேவையில்லை எனக்கு...
உன் தோளில் முகம் புதைக்கும்
தோழமை போதும் எனக்கு!!!
வான் இல்லாத இரவும் நிலவும்
நீ பேசாத இரவும் பகலும்
நான் வாழாத தருணங்களாகும்
புயல் காற்று வீசுகின்ற போதும்
என் சுவாசம் உன்னைத்தான் தேடும்
மழை தூறும் பகல்நேர வானம்
உன் பார்வை நினைவூட்டிச் செல்லும்
சிறு குழந்தை பார்க்கின்ற போதும்
உன் குறும்பு நெஞ்சுக்குள் மலரும்
பனிக்காற்று பறைசாற்றி செல்லும் - ஒரு
பறவை போல் மனம் துள்ளும்
நான் இயல்பாக இருக்க நினைத்தால்
உன் இயல்பு எனை மாற்றிச் செல்லும்
ஏன் தோழி??
தென்றல் என்னைத்
தொட்டுச் செல்கையில்
தேடிப் பார்க்கிறேன்
ஒவ்வொரு முறையும்...
நீ
என்ன சொல்லியனுப்பினாய் என்று!!!
நீயும் மழையும்
தூண்டிவிடுகிறீர்கள் என்னை...
கவிதை எழுத!!!
மழைக்கால மரக்கிளையில்
பறவைகளின் கீச் கீச்...
உணவு தேட இயலாததாலா...
சிறகுகளே சுமையானதாலா...
ஒரு வாரப் பிரிவு
உணர்த்தியது எனக்கு...
எனக்குள் நீ
எத்தனை ஆழமாய்
வேரூன்றி இருக்கிறாய் என்று!!
அனிச்சை செயலாய்
ஆகிப் போனது...
உனக்குத் தொலைபேசுவதும்
குறுஞ்செய்தி அனுப்புவதும்!!!
பிரிவின் வலியை விட
வலித்தது அதிகமாய்...
தெரிந்தே பிரிந்திருக்கிறோம் என்பதால்!!!
காற்றின் திசையில்
திரும்பும் மலர்கள்...
நீ வந்தவுடன்
சூரியகாந்தியானது ஏன்??
வெறுமையை சுமந்து திரிகிறேன்...
பொறுமையை சோதிக்காதே பெண்ணே..
ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போல்
இருப்பதாக சொன்னார்கள்..
அது
நான் தான் என்பது தெரியாமல்!!
கடந்து போன மேகம்
எனக்கு மட்டும்
மழை தூறிச் சென்றது...
என்ன சொல்லியனுப்பினாய்?!?
ஒரு வாரத்தின் முடிவில்
நீ
என்ன பெறப்போகிறாயோ
நானறியேன்...
ஆனால்
நான் இழப்பது அதிகம்!!!
என் வாழ்வில் நீ
வார்த்தையல்ல... வாக்கியம்!!!
முற்றுப்புள்ளி இல்லாது
முற்றுப் பெற்றவள் நீமட்டும்தான்!!!
உன்னுடன் பேசாதிருந்த நாட்களில்
நான் உயிர்வாழ்ந்ததாய்
நினைவிலில்லை...
உன் மடிமீது தலைவைத்து
நட்சத்திரங்கள் எண்ணத்
தேவையில்லை எனக்கு...
உன் தோளில் முகம் புதைக்கும்
தோழமை போதும் எனக்கு!!!
Monday, December 03, 2007
ஆதலினால் காதல் செய்வீர்
மழையில் நனைய
எப்போதும் மறுத்துவிடுகிறேன்...
எனக்குள் இருக்கும் உன்னைக் கரைக்க
இறைவன் செய்யும் சதியென்று!
வீணையைப் போன்றது
என் காதல்..
நீ
துடைத்து வைக்கப் போகிறாயா...
இசை மீட்டப் போகிறாயா?!?
காதல் என்னை எப்போதும்
கடைசி வரிசையில்
நிறுத்திவைத்தது...
நீதான் முன்னிறுத்தினாய்!!!
ஊர் முழுக்க ஒலிபரப்புகிறேன்..
உன்மீதான என் காதலை!
உன்னிடம் மட்டும் ஏனோ
உறக்கம் கலைக்க மறுக்கிறேன்...
எனக்கான இசையை
உன்னிடத்திலும்...
உனக்கான பாடலை
என்னிடத்திலும்...
ஏன் வைத்தான் இறைவன்?!?
வார்த்தைகளின் நினைவிடத்தில்
நின்றுகொண்டிருக்கிறேன்...
உன்னிடம் சொல்ல மறந்த
ஒரு கோடி சொற்கள்...
இங்குதான் புதைக்கப் பட்டிருக்கின்றன..!
எப்போதும் மறுத்துவிடுகிறேன்...
எனக்குள் இருக்கும் உன்னைக் கரைக்க
இறைவன் செய்யும் சதியென்று!
வீணையைப் போன்றது
என் காதல்..
நீ
துடைத்து வைக்கப் போகிறாயா...
இசை மீட்டப் போகிறாயா?!?
காதல் என்னை எப்போதும்
கடைசி வரிசையில்
நிறுத்திவைத்தது...
நீதான் முன்னிறுத்தினாய்!!!
ஊர் முழுக்க ஒலிபரப்புகிறேன்..
உன்மீதான என் காதலை!
உன்னிடம் மட்டும் ஏனோ
உறக்கம் கலைக்க மறுக்கிறேன்...
எனக்கான இசையை
உன்னிடத்திலும்...
உனக்கான பாடலை
என்னிடத்திலும்...
ஏன் வைத்தான் இறைவன்?!?
வார்த்தைகளின் நினைவிடத்தில்
நின்றுகொண்டிருக்கிறேன்...
உன்னிடம் சொல்ல மறந்த
ஒரு கோடி சொற்கள்...
இங்குதான் புதைக்கப் பட்டிருக்கின்றன..!
ஆதலினால் காதல் செய்வீர்!!!
உன்னைக் காதலிக்க ஆரம்பித்தேன்...
கையெழுத்து அழகானது!
நீயும் என்னைக் காதலித்தாய்...
என் தலையெழுத்து தவறானது!!!
இரவுமுழுதும் உறக்கம் வரவில்லை...
நீ எனக்குள்
விழித்துக் கொண்டிருந்தாய்!
உன்னுடன்
பேசுவதற்கான வார்த்தைகளைக்
கோர்த்து வைத்திருந்தேன்..
காற்றாய் வந்து
கலைத்துப் போனது ஏனடி?!?
உன்
நினைவுகளின் ஜதியில்
நாட்டியமானேன்...
பிரிவின் வலியில்
பேச்சற்றுப் போனேன்!
உன் ஒரு வார்த்தை ஜனனம்..
ஒரு வார்த்தை மரணம்!
இந்த இரண்டுக்கும் இடையில்...
நிகழ்கிறது என் பயணம்!
இறந்துவிடவும் சம்மதம்..
பிரிந்து விடாதே...
இறப்பிலும் கொடியது
பிரிவின் வலி!
கையெழுத்து அழகானது!
நீயும் என்னைக் காதலித்தாய்...
என் தலையெழுத்து தவறானது!!!
இரவுமுழுதும் உறக்கம் வரவில்லை...
நீ எனக்குள்
விழித்துக் கொண்டிருந்தாய்!
உன்னுடன்
பேசுவதற்கான வார்த்தைகளைக்
கோர்த்து வைத்திருந்தேன்..
காற்றாய் வந்து
கலைத்துப் போனது ஏனடி?!?
உன்
நினைவுகளின் ஜதியில்
நாட்டியமானேன்...
பிரிவின் வலியில்
பேச்சற்றுப் போனேன்!
உன் ஒரு வார்த்தை ஜனனம்..
ஒரு வார்த்தை மரணம்!
இந்த இரண்டுக்கும் இடையில்...
நிகழ்கிறது என் பயணம்!
இறந்துவிடவும் சம்மதம்..
பிரிந்து விடாதே...
இறப்பிலும் கொடியது
பிரிவின் வலி!
Friday, October 05, 2007
உறங்கும்போதும் நீ
உறங்கச் செல்கையில்
விழித்திருக்க வைப்பதும்
எழ நினைக்கையில்
உறங்க வைப்பதும்
உன் நினைவுகள்தான்!!!
உன் நினைவுகளுடன்
உறங்கச் செல்லும் என்னை
உறங்க வைப்பது
எதுவாக இருக்கும்??
விழித்திருக்க வைப்பதும்
எழ நினைக்கையில்
உறங்க வைப்பதும்
உன் நினைவுகள்தான்!!!
உன் நினைவுகளுடன்
உறங்கச் செல்லும் என்னை
உறங்க வைப்பது
எதுவாக இருக்கும்??
Monday, September 10, 2007
வாழ்க்கை
குடும்பத்துடனான குதூகலத் தருணங்கள்...
குழந்தைகளுடனான நிலாச்சோறு நினைவுகள்...
நண்பர்களுடனான அரட்டைக் கச்சேரிகள்...
காதலியுடன் கடல் பார்த்த காலங்களென...
நெஞ்சு முழுதும் நினைவுகளுடன்
அந்நிய தேசத்தில் அந்நியப்பட்டுப்போய்...
ஆறுதல் முகங்களுக்காய் அலைந்து திரிந்து...
வாழ்வின் முக்கியத் தருணங்களை
இழந்து திரும்பும் நண்பனிடம்
கேட்டுப் பாருங்கள்...
வாழ்க்கை என்றால் என்னவென்பதை!!!
குழந்தைகளுடனான நிலாச்சோறு நினைவுகள்...
நண்பர்களுடனான அரட்டைக் கச்சேரிகள்...
காதலியுடன் கடல் பார்த்த காலங்களென...
நெஞ்சு முழுதும் நினைவுகளுடன்
அந்நிய தேசத்தில் அந்நியப்பட்டுப்போய்...
ஆறுதல் முகங்களுக்காய் அலைந்து திரிந்து...
வாழ்வின் முக்கியத் தருணங்களை
இழந்து திரும்பும் நண்பனிடம்
கேட்டுப் பாருங்கள்...
வாழ்க்கை என்றால் என்னவென்பதை!!!
Sunday, July 08, 2007
Wednesday, June 27, 2007
இரவுச்சிந்தனைகள் பாகம்1
வழியெங்கும் ரத்தத்துளிகள்...
யாரும் மிதிக்கவில்லை -
தொலைவில் சிலுவை!!!
மூங்கில் காடுகளைக்
கடக்கும் காற்று
இசையாவது போல்...
நானும் கவிஞனாகிறேன்...
உன்னைக் கடக்கையில்!!!
தனியாய் நிற்கும்
கலங்கரைவிளக்கைப் பார்க்கும்போதெல்லாம்
நினைவில் வந்துபோகிறது...
கரையில் காத்திருக்கும்
உன் நினைவுகள்!!!
மழைநேரப் பூங்கா மரத்தடியில்
விளையாடும் குழந்தை
சொல்லாமல் சொல்லியது...
நான் தொலைத்துக்கொண்டிருப்பதை!!!
காதல்.
கற்றுக்கொடுத்தது...
ஏமாற்றுவதை அவளுக்கும்!
ஏமாறுவதை எனக்கும்!
யாரும் மிதிக்கவில்லை -
தொலைவில் சிலுவை!!!
மூங்கில் காடுகளைக்
கடக்கும் காற்று
இசையாவது போல்...
நானும் கவிஞனாகிறேன்...
உன்னைக் கடக்கையில்!!!
தனியாய் நிற்கும்
கலங்கரைவிளக்கைப் பார்க்கும்போதெல்லாம்
நினைவில் வந்துபோகிறது...
கரையில் காத்திருக்கும்
உன் நினைவுகள்!!!
மழைநேரப் பூங்கா மரத்தடியில்
விளையாடும் குழந்தை
சொல்லாமல் சொல்லியது...
நான் தொலைத்துக்கொண்டிருப்பதை!!!
காதல்.
கற்றுக்கொடுத்தது...
ஏமாற்றுவதை அவளுக்கும்!
ஏமாறுவதை எனக்கும்!
இரவுச்சிந்தனைகள் பாகம்2
நான் தூங்க
கதைகள் சொல்லும் பாட்டிக்கு...
யார் சொல்வார்
கதைகள்???
புல்வெளியிடையே துளிர்த்திருக்கும்
பனித்துளியைக் கவரவரும்
பகலவன் போல்தானடி நீ வருகிறாய்!!!
இரவில் புலரும் நிலவாய் உன் முகம்...
மின்சாரம் அறுந்த இரவுப் பொழுதுகளில்!!!
நீ வைத்துவிட்டுப் போகும்
இந்த ஒற்றை ரோஜாவுக்காகத்தான்
எனக்கு கல்லறை கட்டச் சொன்னேன்!!!
கதைகள் சொல்லும் பாட்டிக்கு...
யார் சொல்வார்
கதைகள்???
புல்வெளியிடையே துளிர்த்திருக்கும்
பனித்துளியைக் கவரவரும்
பகலவன் போல்தானடி நீ வருகிறாய்!!!
இரவில் புலரும் நிலவாய் உன் முகம்...
மின்சாரம் அறுந்த இரவுப் பொழுதுகளில்!!!
நீ வைத்துவிட்டுப் போகும்
இந்த ஒற்றை ரோஜாவுக்காகத்தான்
எனக்கு கல்லறை கட்டச் சொன்னேன்!!!
Friday, May 18, 2007
என் கவிதைகள்
நம்மிரு கண்களும் சந்தித்த பொழுதினில்
நம்மைமீறி உதிர்ந்த புன்னகையை...
தென்றல் சிறைபிடித்தது!!!
நான் உன்னையும்...
நீ என்னையும்!!!
காத்துக்கொண்டிருக்கிறேன் கைதாவதற்கு....
உன் இதயத்தை A/C செய்து வை!!!
வீணையின் அதிர்வுகள்
மனதை அமைதிப்படுத்துவது போல்...
நீ இருக்கிறாய்...
நிலத்திற்கு!!!
நீ என்
நினைவிலில்லாத கணங்களில்...
நிசப்தம் கூட சப்தம்தான்!!!
என்
அனைத்து சப்தங்களின் சுருதியாக
நீதானே இருக்கிறாய்!!!
நம்மைமீறி உதிர்ந்த புன்னகையை...
தென்றல் சிறைபிடித்தது!!!
நான் உன்னையும்...
நீ என்னையும்!!!
காத்துக்கொண்டிருக்கிறேன் கைதாவதற்கு....
உன் இதயத்தை A/C செய்து வை!!!
வீணையின் அதிர்வுகள்
மனதை அமைதிப்படுத்துவது போல்...
நீ இருக்கிறாய்...
நிலத்திற்கு!!!
நீ என்
நினைவிலில்லாத கணங்களில்...
நிசப்தம் கூட சப்தம்தான்!!!
என்
அனைத்து சப்தங்களின் சுருதியாக
நீதானே இருக்கிறாய்!!!
Tuesday, May 08, 2007
Wednesday, April 25, 2007
காதல் தேசம்
காதல்....
உளியா... கோடாலியா!!!
காதல்...
கத்தியா... சுத்தியலா!!!
காதல்...
தாயா... நீயா?!?
*** ***
காத்திருக்கும் பொழுதெல்லாம் எப்படி
காதல் மட்டும் தவமாகிறது!?!
*** ***
இந்தக் காதல் மட்டும்
ஏன் அழகானவைகளை
உன்னுடன் மட்டும்
ஒப்பிட வைக்கிறது?!?
*** ***
எப்போதும்
கேள்விக்குறியான என்னை
ஆச்சர்யக்குறியாக்கி
அதிசயம் செய்ததே...
காதலில் அப்படி
என்னதான் இருக்கிறது!!!
காதலைத்தவிர???
உளியா... கோடாலியா!!!
காதல்...
கத்தியா... சுத்தியலா!!!
காதல்...
தாயா... நீயா?!?
*** ***
காத்திருக்கும் பொழுதெல்லாம் எப்படி
காதல் மட்டும் தவமாகிறது!?!
*** ***
இந்தக் காதல் மட்டும்
ஏன் அழகானவைகளை
உன்னுடன் மட்டும்
ஒப்பிட வைக்கிறது?!?
*** ***
எப்போதும்
கேள்விக்குறியான என்னை
ஆச்சர்யக்குறியாக்கி
அதிசயம் செய்ததே...
காதலில் அப்படி
என்னதான் இருக்கிறது!!!
காதலைத்தவிர???
Tuesday, April 17, 2007
Monday, April 16, 2007
அம்மா
அப்போது சிறுவயது...
பென்சில் சீவுகையில்
அறுந்துபட்ட காயத்திற்கான
அழுகை அது!!!
அழுகைக் குரல் கேட்டு
அடித்துக்கொண்டே மருந்திட்டாய் அம்மா...
அன்பான வசவுகளுடன்!!!
இன்றும் வெட்டிக்கொண்டேன்...
ஆனால்...
அடித்துக்கொண்டும் திட்டிக்கொண்டும்
மருந்துபோட... நீ
அருகிலில்லாததுதான் வலிக்கிறது அம்மா...!!!
பென்சில் சீவுகையில்
அறுந்துபட்ட காயத்திற்கான
அழுகை அது!!!
அழுகைக் குரல் கேட்டு
அடித்துக்கொண்டே மருந்திட்டாய் அம்மா...
அன்பான வசவுகளுடன்!!!
இன்றும் வெட்டிக்கொண்டேன்...
ஆனால்...
அடித்துக்கொண்டும் திட்டிக்கொண்டும்
மருந்துபோட... நீ
அருகிலில்லாததுதான் வலிக்கிறது அம்மா...!!!
Monday, April 09, 2007
Sunday, March 11, 2007
Friday, February 23, 2007
Saturday, January 27, 2007
Monday, January 08, 2007
Just a thought
நேற்றும் இன்றும்...
நானும் நீயும்...
இரவும் பகலும்....
வெயிலும் குளிரும்...
மலையும் மழையும்...
இருப்பதால் இருக்கிறேன்!
பிரிவினில் மரிக்கிறேன்!
நானும் நீயும்...
இரவும் பகலும்....
வெயிலும் குளிரும்...
மலையும் மழையும்...
இருப்பதால் இருக்கிறேன்!
பிரிவினில் மரிக்கிறேன்!
Subscribe to:
Posts (Atom)