நம்மிரு கண்களும் சந்தித்த பொழுதினில்
நம்மைமீறி உதிர்ந்த புன்னகையை...
தென்றல் சிறைபிடித்தது!!!
நான் உன்னையும்...
நீ என்னையும்!!!
காத்துக்கொண்டிருக்கிறேன் கைதாவதற்கு....
உன் இதயத்தை A/C செய்து வை!!!
வீணையின் அதிர்வுகள்
மனதை அமைதிப்படுத்துவது போல்...
நீ இருக்கிறாய்...
நிலத்திற்கு!!!
நீ என்
நினைவிலில்லாத கணங்களில்...
நிசப்தம் கூட சப்தம்தான்!!!
என்
அனைத்து சப்தங்களின் சுருதியாக
நீதானே இருக்கிறாய்!!!
Friday, May 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment